Wednesday, May 6, 2009

ஈழத் தமிழர்கள்

ஓயாத குண்டு வீச்சில் ஓய்ந்து போயின எங்கள் செவிப்பறைகள்
தீராத சோகத்தில் புன்னகை மறந்து போயின எங்கள் உதடுகள்
அடிக்க அடிக்க கல்லும் கரையும் என்பர்
அதை பொய்யாக்கின உங்கள் இதயங்கள்

நாங்கள் வேண்டியதெல்லாம் எங்கள் மண்ணில் எங்களுக்கு உரிமை
நீங்கள் தந்ததுவோ எங்களுக்கு பூவுலகில் ஓர் நரகை
தினம் தினம் செத்து செத்து பிழைக்கும் எங்கள் வாழ்வில்
இனி சுதந்திரம் என்பது எங்கள் மரணம் தானோ